வேலைவாய்ப்பு: தேசிய மனித உரிமை ஆணையத்தில் பணியிடங்கள்

தேசிய மனித உரிமை ஆணையத்தில் காலியாக உள்ள அதிகாரி, உதவி பதிவாளர் மற்றும் முதுகலை ஆராய்ச்சி அதிகாரிகள் போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சட்டத்துறை, புலனாய்வுப் பிரிவு, ஆராய்ச்சித் துறை, கணக்கியல் ஆகிய துறைகளில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

கல்வித் தகுதி: 
சட்டம், அரசியல் அறிவியல், வரலாறு, புள்ளியியல், சமூகவியல், சமூக சேவை, மனித உரிமைகள், உளவியல், மக்கள் தொகை சார்ந்த ஆய்வுகள் மற்றும் குற்றவியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் மற்றும் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
செயலாளர்,
தேசிய மனித உரிமைகள் ஆணையம்,
மானவ் அதிகார் பவன்,
பிளாக்-சி, ஜி.பி.ஓ.காம்ப்ளக்ஸ், இந்திய ஐஎன்ஏ,
புது டெல்லி - 110023
கடைசித் தேதி: 28.02.2017
மேலும் முழுமையான விவரங்களுக்கு http://nhrc.nic.in/Documents/Notificationregardingfillingupvariousposts26122016.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வேலைவாய்ப்பு: தேசிய மனித உரிமை ஆணையத்தில் பணியிடங்கள் வேலைவாய்ப்பு: தேசிய மனித உரிமை ஆணையத்தில் பணியிடங்கள் Reviewed by நமதூர் செய்திகள் on 22:19:00 Rating: 5

No comments:

Powered by Blogger.