துபையில் நடைபெற்ற மனிதநேய கலாச்சார பேரவையின் “சமூக நல்லிணக்க மாநாடு

துபையில் நடைபெற்ற மனிதநேய கலாச்சார பேரவையின் “சமூக நல்லிணக்க மாநாடு
ஐக்கிய அரபு அமீரகம் துபையில் 06-01-2017 அன்று மஜக சார்பு வெளிநாடு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவையின் சார்பில் சமூக நல்லிணக்க மாநாடு தனியார் பள்ளி உள் அரங்கத்தில் நடைபெற்றது.
அமீரக செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் அமீரக பொருளாளர் அதிரை அஸ்ரப், IKP செயலாளர் அப்துல்ரஹ்மான், அமீரக துணைச் செயலாளர்கள் அசாலி அஹமது, அபுல் ஹசன்,பத்தாஹீல்லாஹ், அமீரக ஊடக பிரிவு செயலாளர் ஜியாவுல்ஹக், அமீரக மூத்த ஆலோசகர் சர்புதீன் உட்பட அனைத்து மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
அபுதாபி IKP செயலாளர் சபியுல்லா மன்பஈ இறைவசனத்துடன் துவக்கினார், அமீரக துணைச் செயலாளர் அப்துல் ரஜாக் வரவேற்புரை நிகழ்த்தினார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களுடைய பெயர் மாநாட்டு அரங்கத்திற்கு சூட்டப்பட்டிருந்தது.
மாநாட்டில், ஆலியா டிரேடிங் நிர்வாக இயக்ககுநர் சேக்தாவூது, ஆரிபா குழுமம் நிர்வாக இயக்குனர் தோப்புத்துறை சுல்தானுல் ஆரிப், மணமேல்குடி நஜிமுத்தீன்,அபுதாபி தமிழ் சங்கம் ரெஜினால்ட் சாம்ஸன்,சமூக ஆர்வலர் சுகைபூதீன்,இஸ்லாமிய அழைப்பாளர் நாசர் அலிகான்,சமூக ஆர்வலர் குத்தாலம் அஷ்ரப்,மர்ஹபா வெல்பேர் அசோசியேசன் ரஃபி முகம்மது, அபுதாபி லால்பேட்டை ஜமாத் தலைவர் யாசர் அரபாத், நாகை மெய்தீன், தொழிலதிபர் சாகுல் ஹமீது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த சமூக நல்லிணக்க மாநாட்டில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், துணைப் பொதுச்செயலாளர்கள் மைதீன் உலவி, மதுக்கூர் ராவுத்தர்ஷா ஆகியோர் பங்கேற்று எழுச்சி உரை நிகழ்த்தினர்.
அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேருந்துகள்,வேன்கள் மற்றும் கார்களில் மக்கள் திரண்டு வந்திருந்தனர். இந்துக்கள்,முஸ்லிம்கள்,கிருத்தவர்கள், தலித்துக்கள் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்தவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கென்று தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது.
அமீரகத்தில் வாழும் தொழில் அதிபர்கள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள், படைப்பாளிகள், தொழிலாளர்கள், ஜமாத்தார்கள் என பல்வேறு தரப்பினரும் வருகை தந்து பொதுச்செயலாளர் உள்ளிட்ட மஜக தலைவர்களை சந்தித்து பேசினர். ஜமாத்தார்கள், பொதுநல அமைப்புகளின் தலைவர்கள் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.MLA அவர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் மக்களின் கேள்விகளுக்கு மஜக பொதுச் செயலாளர் தமீம் அன்சாரி அவர்கள் பதிலளித்தார்கள்.
நிகழ்ச்சியில் இறுதியாக துபை மண்டல செயலாளர் யூசுப்ஷா நன்றி கூறினார்.
துபையில் நடைபெற்ற மனிதநேய கலாச்சார பேரவையின் “சமூக நல்லிணக்க மாநாடு துபையில் நடைபெற்ற மனிதநேய கலாச்சார பேரவையின் “சமூக நல்லிணக்க மாநாடு Reviewed by நமதூர் செய்திகள் on 23:37:00 Rating: 5

No comments:

Powered by Blogger.