சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர்!

இந்தியாவின் 68-வது குடியரசு தினவிழா டெல்லியில் நாளை 26-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் ஷேக்முகமது பின் சையது அலி டெல்லி வந்துள்ளார். அவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.அபுதாபி இளவரசரை பிரதமர் மோடி வரவேற்றார். இருவரும் இன்று நடக்கும் சந்திப்பில் 16 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்கள்.
அபுதாபி இளவரசரை இன்று தனது இல்லத்துக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுக்கிறார் பிரதமர் மோடி. இந்தச் சந்திப்பின்போது இரு நாட்டின் உறவுகள், பாதுகாப்பு, வர்த்தகம் போன்றவை குறித்து இருவரும் விவாதிக்கிறார்கள். அதன்பின்னர், ஐதராபாத் இல்லத்தில் நடக்கும் சந்திப்புக்கு அபுதாபி இளவரசர் வருகிறார். அவரை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் சந்தித்துப் பேசுகிறார்கள்.
சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர்! சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர்! Reviewed by நமதூர் செய்திகள் on 03:40:00 Rating: 5

No comments:

Powered by Blogger.