கட்டண உயர்வு: தொடரும் மாணவர்கள் போராட்டம்!

கட்டண உயர்வு: தொடரும் மாணவர்கள் போராட்டம்!

அரசுப் பேருந்துக் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டிருப்பதைக் கண்டித்து தமிழகமெங்கும் மாணவர்கள், பொதுமக்களின் போராட்டம் 3ஆவது நாளாகத் தொடர்கிறது.
சென்னை, கோவை, விழுப்புரம், சேலம், தஞ்சை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கல்லூரி மாணவர்கள் இன்று (ஜனவரி 23) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பேருந்து கட்டண உயர்வால் ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி, கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை அரசு கல்லூரி மாணவர்கள் சுமார் 100 பேர் வகுப்புகளை புறக்கணித்து இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்தக் கட்டண உயர்வைத் திரும்ப பெறக் கோரியும் கோ‌ஷம் எழுப்பினார்கள். இதைத் தொடர்ந்து மாணவர்கள் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லப் புறப்பட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் திடீரென சாலை மறியல் செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நாங்கள் போராட்டம் செய்ய வேண்டும் என்று நினைத்துப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. எங்களைப் போராட்டத்திற்கு நீங்கள் தள்ளுகிறீர்கள். மேலும் இந்தப் பேருந்துக் கட்டண உயர்வை அரசு திரும்பப்பெறாவிட்டால் மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போராட்டம் போலத் தமிழகம் இந்தப் போராட்டத்தையும் காணும் என மாணவர்கள் தெரிவித்தனர்.
பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் இந்தப் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
கட்டண உயர்வு: தொடரும் மாணவர்கள் போராட்டம்! கட்டண உயர்வு: தொடரும் மாணவர்கள் போராட்டம்! Reviewed by நமதூர் செய்திகள் on 03:10:00 Rating: 5

No comments:

Powered by Blogger.