நித்யானந்தாவைச் சாடும் பிரசன்னா

நித்யானந்தாவைச்  சாடும் பிரசன்னா

வைரமுத்துவின் ஆண்டாள் பற்றிய கட்டுரையும் பேச்சும் ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சை இன்னமும் குறைந்தபாடில்லை. இந்தச் சர்ச்சையில் தரக்குறைவான விமர்சனங்களை, ஆபாசப் பேச்சுகளை நித்யானந்தாவின் சீடர்கள் சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியிட்டுவருகின்றனர். இது குறித்து நடிகர் பிரசன்னா கருத்து தெரிவித்துள்ளார்.
வைரமுத்து தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் எனப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. ஆனால் சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்கள் அருவருக்கத்தக்க வகையில் ஆபாச வார்த்தைகளால் வைரமுத்துவைத் திட்டி வெளியாகின்றன. அவற்றில் பெரும்பாலானவை நித்யானந்தாவின் சீடர்கள் என சொல்லிக்கொள்பவர்களால் வெளியிடப்படுகின்றன. நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து இளம் பெண்கள் பேசிய ஆபாசப் பேச்சு வீடியோ சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் நித்யானந்தாவின் உருவம் பின்னால் தெரியும் வகையில் வெளிநாட்டினர் சிலர் வெளியிட்ட வீடியோவிலும் வைரமுத்துவை ஆபாசமாகத் திட்டியுள்ளனர்.
இது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில் நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில், “உண்மையில் இந்து மதத்தைக் கொச்சைப்படுத்த, அசிங்கப்படுத்தக் கிளம்பியிருப்பது நித்யானந்தா கூட்டம்தான். அழித்தொழிக்கப்படவேண்டியது இந்து எதிரியான இக்கூட்டமே! சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே இவ்வற்பப் பதர்களைச் சுட்டெரித்துவிடு” என்று பதிவிட்டுள்ளார்.
நித்யானந்தாவைச் சாடும் பிரசன்னா நித்யானந்தாவைச் சாடும் பிரசன்னா Reviewed by நமதூர் செய்திகள் on 03:25:00 Rating: 5

No comments:

Powered by Blogger.