முத்தலாக் கொடுப்பவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் - உவைசி!

முத்தலாக் கொடுப்பவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் - உவைசி!
அவுரங்காபாத்(23 ஜன 2018): விவாகரத்திற்கு உடனடி தீர்வாக முத்தலாக்கை தேர்ந்தெடுக்கும் முஸ்லிம்கள் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார்.
அவுரங்காபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உவைசி,"பத்மாவத் படத்துக்கு சர்ச்சை எழுந்த போது இது குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், முத்தலாக் மசோதா விவகாரத்தில் இது போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முத்தலாக் மசோதா முஸ்லீம் சமூகத்துக்கு எதிரான சதி ஆகும். முத்தலாக் மசோதா முஸ்லீம் பெண்களை வீதிக்கு வர வழைத்து ஆண்களை சிறைக்கு அனுப்பும் தந்திரமாகும்.
பிரதமர் மோடி முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க முயற்சிக்கிறார். அது ஒருபோதும் நடக்காது." என்றார்.
முத்தலாக் கொடுப்பவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் - உவைசி! முத்தலாக் கொடுப்பவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் - உவைசி! Reviewed by நமதூர் செய்திகள் on 03:38:00 Rating: 5

No comments:

Powered by Blogger.