சங்கர் கொலை வழக்கில் நேர்மையாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி திடீர் மரணம்!

சங்கர் கொலை வழக்கில் நேர்மையாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி திடீர் மரணம்!
கோவை(25 ஜன 2018): சாதி ஆணவப்படுகொலைக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய நீதிபதி அலமேலு நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலையின் இறுதித்தீர்ப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி வழங்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய 11 பேரில் 8 பேர் குற்றவாளி என்றும், அவர்களில் 6 பேருக்கு தூக்குத்தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார் வழக்கை விசாரித்து வந்த மாவட்ட நீதிபதி அலமேலு நடராஜன். இந்த தீர்ப்பு இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் அமைந்தது.
இந்நிலையில் அலமேலு கடந்த திங்கள்கிழமையன்று இரவு கடுமையான காய்ச்சல் மற்றும் சளித் தொந்தரவால் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி அலமேலு நடராஜன், பின்னர் உடனடியாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கடந்த சில நாள்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாகக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேர்மையான முறையில் தீர்ப்பு வழங்குவதில் பெயற்பெற்ற அலமேலுவின் மரணம் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சங்கர் கொலை வழக்கில் நேர்மையாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி திடீர் மரணம்! சங்கர் கொலை வழக்கில் நேர்மையாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி திடீர் மரணம்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:03:00 Rating: 5

No comments:

Powered by Blogger.