மரபணு மாற்றப் பயிர்கள் தோல்வியுற்றன!

மரபணு மாற்றப் பயிர்கள் தோல்வியுற்றன!

இந்தியாவில் பி.டி பருத்தி உள்ளிட்ட மரபணு மாற்ற பயிர்கள் தோல்வியுற்றுவிட்டதாக வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன் துணை ஆசிரியராக பணியாற்றி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்று அண்மையில் வெளியாகியது. இந்த அறிக்கை பி.டி பருத்தி பயிர் தோல்வியுற்றது என்று தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை குறித்து மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரான கே.விஜயராகவன் விமர்சித்துள்ளார்.
இந்த ஆய்வறிக்கையில் இந்தியாவில் பயிர் மேம்பாடு, மரபணு மாற்றப் பயிர்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக பி.டி பருத்தி, பி.டி கத்திரிக்காய், டி.எம்.ஹெச்-11, மரபணு மாற்ற கடுகு ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், “இந்தியாவில் மரபணு மாற்ற பருத்தி தோல்வியுற்றுவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வேளாண் தொழில்நுட்பமாகவும் அது தோற்றுவிட்டது. பருத்தி விவசாயிகளுக்கு வாழ்வாதார பாதுகாப்பு அளிக்கவும் அது தோற்றுவிட்டது. இவர்களில் பலர் சிறு, குறு விவசாயிகளாகவே உள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை முழுவதும் தவறுகள் நிறைந்திருப்பதாக முதன்மை அறிவியல் ஆலோசகரான விஜயராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். இந்தியாவின் பசுமைப் புரட்சிக்குத் தலைமை வகித்ததாகக் கூறப்படும் எம்.எஸ்.சுவாமிநாதனே மரபணு மாற்றப் பயிர்களின் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மரபணு மாற்றப் பயிர்கள் தோல்வியுற்றன! மரபணு மாற்றப் பயிர்கள் தோல்வியுற்றன! Reviewed by நமதூர் செய்திகள் on 22:59:00 Rating: 5

No comments:

Powered by Blogger.