தமிழக ராணுவ வீரர் மரணத்தில் திடீர் திருப்பம் - உறவினர்கள் அதிர்ச்சி!


தமிழக ராணுவ வீரர் மரணத்தில் திடீர் திருப்பம் - உறவினர்கள் அதிர்ச்சி!
தக்கலை (12 அக் 2018): தமிழக ராணுவ வீரர் ஜெகன் ஜெகன் (38) வீர மரணம் அடைந்ததாக கூறப் பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அவர் சக வீரர்களால் கொலை செய்யப் பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த கோழிப்போர்விளையைச் சேர்ந்தவர் ஜெகன் (39). 16 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் இணையும்போது, 15 ஆண்டுகள் பணிபுரிவதாக எழுதிக்கொடுத்தவர். வறுமை காரணமாக பணி நீட்டிப்புப் பெற்று தொடர்ந்து பணியாற்றினார். இரண்டு சகோதரிகளுக்கும் திருமணம் செய்துவைத்துவிட்டு, இந்த ஆண்டு ஜனவரி மாதம், தனது 38-வது வயதில் திருமணம் செய்துகொண்டார். அவரது மனைவி சுபி 7மாத கர்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில், பஞ்சாப்பில் நக்சலைட்டுகளுடன் நடந்த சண்டையில் துப்பாக்கிச் சூட்டில் குண்டுபாய்ந்து வீரமரணம் அடைந்ததாக உறவினர்களுக்கு தகவல் கூறப்பட்டது.
அவரது உடல், நேற்று வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. அவருடன், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்கள் வந்திருந்தார்கள். மேலும், திருவனந்தபுரம் பெட்டாலியனைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் உடலைச் சுமந்து வந்திருந்தனர். ராணுவ வீரர் ஜெகனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அவருக்கு உரிய மரியாதை செலுத்தாமலேயே இறுதிச் சடங்கும் செய்யப் பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர் விசாரித்ததில் ஜெகன் வீர மரணம் அடையவில்லை என்றும் சக வீரர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் கொல்லப் பட்டதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகனின் உறவினர்கள் உரிய விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக ராணுவ வீரர் மரணத்தில் திடீர் திருப்பம் - உறவினர்கள் அதிர்ச்சி! தமிழக ராணுவ வீரர் மரணத்தில் திடீர் திருப்பம் - உறவினர்கள் அதிர்ச்சி! Reviewed by நமதூர் செய்திகள் on 04:37:00 Rating: 5

No comments:

Powered by Blogger.