மீண்டும் ஒரு நிர்பயா!

மீண்டும் ஒரு நிர்பயா!

இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அரியானாவில் கடந்த மே 11ஆம் தேதி ரோக்தாக் பகுதியில் 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஏழு பேர் கொண்ட கும்பலால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது. கணவரால் கைவிடப்பட்ட பெண்ணை மே 9ஆம் தேதி சோனிபட் அருகே மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு ரோக்தாக் பகுதியில் வீசியுள்ளனர். பின் அவரின் உடலைச் சிதைத்து காரை ஏற்றி கொடூரமாகச் கொலை செய்துள்ளனர். இளம் பெண்ணின் பெற்றோர் மகளைக் காணவில்லை என்று காவல்துறையில் அளித்த புகாரின்பேரில் அவர் மே 11ஆம் தேதி அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சுமித் மற்றும் விகாஸ் ஆகிய இருவரைக் கைது செய்துள்ளதாக சோனிபட் துணை ஆய்வாளர் அஜய் மாலிக் தெரிவித்துள்ளார். டெல்லியில் நிர்பயாவுக்கு நடந்தது போன்ற கொடூரமான செயல் மீண்டும் அரியானாவில் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நிர்பயா வழக்கில் நான்கு பேருக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனையை உறுதிசெய்த நிலையிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது அனைவரிடத்திலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் பதிவான வழக்குகளில் 34,651 எண்ணிக்கையில் பாலியல் வன்முறை வழக்குகள் என்று தேசிய குற்றவியல் ஆய்வறிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஒரு நிர்பயா! மீண்டும் ஒரு நிர்பயா! Reviewed by நமதூர் செய்திகள் on 00:16:00 Rating: 5

No comments:

Powered by Blogger.