மோடிக்கு வளையல் அனுப்பும் நக்மா!

மோடிக்கு வளையல் அனுப்பும் நக்மா!

இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கத் தவறிய பிரதமர் மோடிக்கு வளையல் அனுப்பும் போராட்டம் நடத்தவுள்ளதாக மகிளா காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் நக்மா தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 6ஆம் தேதி புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகையும், அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளருமான நக்மா கூறுகையில், “பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பின்னர் காஷ்மீர் பிரச்னை, நக்சலைட் தாக்குதலால் ராணுவ வீரர்கள் கொல்லப்படுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இதே பிரச்னை நடந்துவந்த சமயத்தில், தற்போதைய மத்திய அமைச்சர் ஸ்ருமிதி ராணி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வளையல் அனுப்பும் போராட்டத்தை மேற்கொண்டார். அதேபோல நாங்களும் மகளிர் காங்கிரஸ் சார்பில் வரும் 8ஆம் தேதி வளையல்களைச் சேகரித்து ஸ்ருமிதி ராணி மூலமாகவே பிரதமருக்கு அனுப்பும் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளோம்.
மேலும் நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு கொடுக்காமல் பாஜக அரசு அலட்சியம் காட்டுகிறது. இதைக் கண்டித்து வரும் 20ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மகளிர் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். இவையனைத்தும் ஆகஸ்ட் மாதம் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மோடிக்கு வளையல் அனுப்பும் நக்மா! மோடிக்கு வளையல் அனுப்பும் நக்மா! Reviewed by நமதூர் செய்திகள் on 22:12:00 Rating: 5

No comments:

Powered by Blogger.