தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும் : ஆர்.நல்லகண்ணு

தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும் : ஆர்.நல்லகண்ணு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, நெல்லை மாவட்டமான வள்ளியூரில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக அரசானது மக்களின் பிரச்னைகள் குறித்து எந்தவித பொறுப்பும் எடுக்கவில்லை. ஆளும் கட்சியில் அவர்களுடைய பிரச்னையையே தீர்க்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, மக்களுடைய பிரச்னையை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அடிப்படை பிரச்னையான குடிநீர் பிரச்னையைக் கூட அவர்களால் தீர்க்க முடியவில்லை.
தமிழக அரசு ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க மணல் குவாரிகள் மூடப்படும் என்று அறிவித்தது. இதனால் கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலை இல்லை என்று கூறி, தற்போது மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
நாடாளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை. மேலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக் கூடாது என்று ஏற்கனவே சட்டம் உள்ளது. இருந்தாலும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே, தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும் : ஆர்.நல்லகண்ணு தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும் : ஆர்.நல்லகண்ணு Reviewed by நமதூர் செய்திகள் on 22:08:00 Rating: 5

No comments:

Powered by Blogger.