ஆடம்பர திருமணங்களுக்குத் தடை: சித்தராமையா

ஆடம்பர திருமணங்களுக்குத்  தடை: சித்தராமையா

கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வார் மாவட்டத்தில் சோமேஸ்வரர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை(நேற்று) ஏழை ஜோடிகளுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இலவச திருமணத்தை நடத்தி வைத்தார்.அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
திருமணச் செலவு அதிகரித்துக் கொண்டே இருப்பதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.எனவே அதை கருத்தில் கொண்டு கர்நாடகத்தில் ஆடம்பர திருமணங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற முடிவை கர்நாடக அரசானது தற்போது எடுத்துள்ளது.
மேலும் திருமணத்துக்கு தேவையான செலவுகளை குறைத்து ஆடம்பரத்தை முற்றிலும் நீக்கிவிட வேண்டும். திருமணத்தை தடபுடலாக நடத்திட வேண்டும் என்பதற்காக அதிகமாக செலவிடக்கூடாது. அதேபோல் கலப்பு திருமணம் செய்யும் நபர்களுக்கு மாநில அரசின் சார்பில் ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஜாதி வேறுபாடுகளை களைய வேண்டும் என்பதற்காகவும், கலப்பு திருமணம் செய்வோர்களின் வாழ்க்கைக்கு உதவி செய்வதற்காகவும் இந்த நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
ஆடம்பர திருமணங்களுக்குத் தடை: சித்தராமையா ஆடம்பர திருமணங்களுக்குத் தடை: சித்தராமையா Reviewed by நமதூர் செய்திகள் on 23:59:00 Rating: 5

No comments:

Powered by Blogger.