வி.களத்தூரில் மீண்டும் திருடர்களின் நடமாட்டம்.

வி.களத்தூர் பகுதியில் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

மில்லத் நகர், வண்ணரம்பூண்டி ஆகிய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய இடங்களில் கூட மாலை 6, 7 மணிக்கெல்லாம் பல புதியவர்களில் நடமாட்டம் தென்படுவதாக பொதுமக்களில் சிலர் பார்த்துள்ளனர்.

கடந்த வருடம் இதேபோல வி.களத்தூர் பகுதியில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடந்தன. காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு அவர்களை பிடித்தனர். அதன்பிறகு திருடர்களில் பயம் இல்லாமல் இருந்தது.

தற்போது மீண்டும் திருடர்களில் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பதற்றமடைந்துள்ளனர். ஊரின் பல்வேறு பகுதியிலும் அதே பேச்சாக உள்ளது. காவல்துறையினர் உடனடியாக அந்த திருடர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
வி.களத்தூரில் மீண்டும் திருடர்களின் நடமாட்டம். வி.களத்தூரில் மீண்டும் திருடர்களின் நடமாட்டம். Reviewed by நமதூர் செய்திகள் on 20:13:00 Rating: 5

No comments:

Powered by Blogger.