வி.களத்தூர் முன்னால் எஸ்.ஐ கண்டித்து பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞரை தரக்குறைவாக பேசிய குன்னம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெரம்பலூரில் மாவட்ட அட்வகேட் அசோஸியேசன் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள ஓலைப்பாடி கிராமத்தைச் சேர்ந்த வேலு மகன் சேகருக்கும், பிச்சைபிள்ளை மகன் இளவரசனுக்கும் நிலத்தகராறு இருந்ததாம். இதுதொடர்பாக, கடந்த 6-ம் தேதி சேகர், வழக்கறிஞர்கள் த. இளவரசு, கலைச்செல்வன் ஆகியோர் குன்னம் காவல் நிலையத்துக்கு சென்றுள்ளனர். அப்போது, அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மாரிமுத்துவிடம் வழக்கு விசாரணை குறித்த விவரம் கேட்டதற்கு, அவர் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு வழக்கு சம்பந்தமான விவரங்களை தர மறுத்து, வழக்கறிஞர் இளவரசுக்கு கொலை மிரட்டல் விடுத்தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வழக்கறிஞர் த. இளவரசுக்கு கொலை மிரட்டல் விடுத்து, தகாத முறையில் நடந்துகொண்ட குன்னம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட அட்வகேட் அசோஸியேசன் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், காவல் உதவி ஆய்வாளர் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும், அவரது நடவடிக்கையை கண்டித்தும் பெரம்பலூரில் நீதிமன்ற வளாகம் எதிரே, மாவட்ட அட்வகேட் அசோஸியேசன் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
வி.களத்தூர் முன்னால் எஸ்.ஐ கண்டித்து பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் வி.களத்தூர் முன்னால் எஸ்.ஐ கண்டித்து பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் Reviewed by நமதூர் செய்திகள் on 22:32:00 Rating: 5

No comments:

Powered by Blogger.