மில்லத் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த முள்புதர்கள் சுத்தம் செய்யப்பட்டன.

மில்லத் நகர் செல்லும் படிக்கட்டு அருகில் முள் மரங்கள் வளர்ந்ததால் ஒருவழி பாதை போல 
ஆகிவிட்டது. அதனால் பொதுமக்கள் மிகவும் சிரமதிற்குள்ளாகினர்.
இரவு நேரங்களில் மின்விளக்கும் சரிவர எரியவில்லை.

இந்த பிரச்சனையை  SDPI கட்சியின் சார்பாக மில்லத் நகர் தலைவர் M.நூர் முஹமது தலைமையில் வி.களத்தூர் ஊராட்சிமன்றத் தலைவர் அவர்களிடம் 28.01.2015 புகார் செய்யப்பட்டது. அதற்கு உடனடியாக சரி செய்வதாக உறுதியளித்தார்.

அதன்படி இன்று 29.01.2015 பொக்லின் இயந்திரம் மூலம் அந்த முள் மரங்களை நீக்கி சுத்தம் செய்யப்பட்டது. ஊராட்சிமன்றத் தலைவர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்காக SDPI கட்சி தலைவர் M.நூர் முஹமது மில்லத் நகர் மக்கள் சார்பாக தொடர்பு கொண்டு நன்றி கூறினார்.




மில்லத் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த முள்புதர்கள் சுத்தம் செய்யப்பட்டன. மில்லத் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த முள்புதர்கள் சுத்தம் செய்யப்பட்டன. Reviewed by நமதூர் செய்திகள் on 02:54:00 Rating: 5

No comments:

Powered by Blogger.