பெரம்பலூரில் SDPI கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் SDPI கட்சியின் ஆலோசனை கூட்டம் 06.05.2015 நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் சித்திக் பாஷா அனைவரையும் வரவேற்றார். 

மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் தலைமை தாங்கி துவக்கவுரையாற்றினார். 


சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் நாகை தாஜ் அவர்கள் சிறப்புரையாற்றி நல்ல பல ஆலோசனை வழங்கினார்கள்.

புதிய மாவட்ட செயற்குழு உறுப்பினராக முஹம்மது ரபீக், அப்துல் ரஹீம் மற்றும் கனி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இறுதியாக மாவட்ட செயலாளர் இதயத்துல்லா அனைவருக்கும் நன்றி கூறினார்.







பெரம்பலூரில் SDPI கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூரில் SDPI கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. Reviewed by நமதூர் செய்திகள் on 20:53:00 Rating: 5

No comments:

Powered by Blogger.