வி.களத்தூர் பேரையூர் கைகாட்டி ரோட்டில் வழிப்பறி கும்பல் - ஜாக்கிரதை!

வி.களத்தூரில் சிறிது நாட்களாக திருடர்களின் நடமாட்டம் அதிகரித்தது. இதனால் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவோ, வீட்டை பூட்டி வெளியூருக்கு செல்லவோ பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

தற்போது திருடர்களின் நடமாட்டம் ஓய்ந்துள்ள நிலையில், வி.களத்தூர் பேரையூர் கைகாட்டி ரோட்டில் வழிப்பறி கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரவு நேரங்களில் தனியாக வருபவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்கிறார்கள். இவர்களை கண்டறிந்து காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
வி.களத்தூர் பேரையூர் கைகாட்டி ரோட்டில் வழிப்பறி கும்பல் - ஜாக்கிரதை! வி.களத்தூர் பேரையூர் கைகாட்டி ரோட்டில் வழிப்பறி கும்பல் - ஜாக்கிரதை! Reviewed by நமதூர் செய்திகள் on 00:22:00 Rating: 5

No comments:

Powered by Blogger.