வி. களத்தூரில் இன்று நடந்த ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி.

வி.களத்தூரில் இன்று (12.01.2015) ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி வி.களத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்று வருகிறது.
கடந்த 06.01.2015 தேதியிலிருந்து  மரவனதம், பிம்பலூர், அகரம், திருவாலந்துறை, பசும்பலூர், அயன்பேரையூர்  ஆகிய கிராமங்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நடைபெற்று வருகிறது. 

இன்று (12.01.2015) வி.களத்தூர் பகுதிக்கு புகைப்படம் எடுக்கும் பனி நடைபெற்று வருகிறது. அதனால் பொதுமக்கள் பலர் ஆர்வமாக கலந்து கொண்டனர். அதிகமான மக்கள் வந்ததால் வெகுநேரம் வரிசையில் நின்றனர். புகைப்படம் எடுக்க வந்த பலரை லிஸ்டில் உங்கள் பெயர் இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டனர். நீண்ட நேரம் காதிருந்தும் புகைப்படம் எடுக்க முடியாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த முகாம் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களுக்கு நடைபெறும்.

குறிப்பு : ஏற்கனவே புகைப்படம் புடிக்காதவர்களில் லிஸ்டில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே புகைப்படம் எடுக்கிறார்கள். 





வி. களத்தூரில் இன்று நடந்த ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி. வி. களத்தூரில் இன்று நடந்த ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி. Reviewed by நமதூர் செய்திகள் on 01:57:00 Rating: 5

No comments:

Powered by Blogger.