கோட்சைவை கண்டித்து பெரம்பலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

பெரம்பலூர் SDPI கட்சியின் சார்பாக பெரம்பலூரில் இன்று மாலை 5 மணியளவில் காந்தி சிலை அருகில் காந்தியை படுகொலை செய்த தீவிரவாதி கோட்சேவிற்கு சிலை அமைப்போம் என்று கூறும் பாசிசவாதிகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

SDPI மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தங்துரை மற்றும் பாப்புலர் ப்ரண்ட் மாவட்ட தலைவர் காஜா சரீப் கண்டன உரை நிகழ்த்தினார்கள். SDPI மாவட்ட செயலாளர் சித்திக் பாஷா நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.


ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோட்சேவிற்கு எதிராக கோசங்கள் எழுப்பியும், கோட்சேவின் படத்தை செருப்பால் அடித்தும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.





கோட்சைவை கண்டித்து பெரம்பலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். கோட்சைவை கண்டித்து பெரம்பலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். Reviewed by நமதூர் செய்திகள் on 20:01:00 Rating: 5

No comments:

Powered by Blogger.