வி.களத்தூர் தலைவருக்கு கிராம சேவை விருது. - தினகரன்

பெரம்பலூர், :   வி.களத்தூர் ஊராட்சிமன்றத் தலைவருக்கு கிராம சேவை விருது சென்னையில் வழங்கப்பட்டது.

சென்னையில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் கல்வியாளர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மகளிர் சுயஉதவிக்குழு தலைவிகள், சமூக சேவகிகள், வணிகர் கள், திரைப்படத் துறையினர் எனத் திறம்பட பணியாற்றுபவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களைப் பாராட்டி விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. இதன்படி நடப்பாண்டின், 36வது சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் விழா 1ம்தேதி சென்னை வடபழனியில் உள்ள கூட்ட அரங்கில் தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பகுதியிலுள்ள வி.களத் தூர் ஊராட்சி மன்றத் தலைவர் நூருல்ஹுதா இஸ்மாயில் என்ற பெண் தலைவருக்கு சிறந்த கிராமசேவை விஜயரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இவரது கணவரான முகமது இஸ்மாயில் என்பவர் வி.களத்தூர் ஊராட்சியின் தலைவராக இதற்கு முன்பு தொடர்ந்து 10ஆண்டுகள் பதவிவகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விருது பெற்ற தலைவருக்கு வளர்ச்சித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

நன்றி :  தினகரன் 
வி.களத்தூர் தலைவருக்கு கிராம சேவை விருது. - தினகரன் வி.களத்தூர் தலைவருக்கு கிராம சேவை விருது. - தினகரன் Reviewed by நமதூர் செய்திகள் on 02:07:00 Rating: 5

No comments:

Powered by Blogger.