அன்புமணி கோரிக்கையை நிராகரித்தது டெல்லி நீதிமன்றம்

இளைஞரணித் தலைவர் அன்புமணியின் கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
 
பாமக இளைாஞரணித் தலைவரான அன்புமணி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, உத்தரப்பிரதேசம், மற்றும் மத்திய பிரதேசம் மாநிலஙகளில், குறிப்பாக, இந்தூரில் தகுதியற்ற மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கினார் என குற்றம் சாட்டது. இது குறித்த வழக்கு விசாரணையை சிபிஐ நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது.
இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய தடை விதிக்க கோரி அன்பு மணி ராமதாஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
ஆனால், அதற்கு தடை விதிக்க முடியாது என்று அன்புமணியின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
 
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை ஏற்கனவே  தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இதனால் அன்புமணி மீதான நீதிமன்றப்பிடி இறுகுவதாக கூறப்படுகிறது.
அன்புமணி கோரிக்கையை நிராகரித்தது டெல்லி நீதிமன்றம் அன்புமணி கோரிக்கையை நிராகரித்தது டெல்லி நீதிமன்றம் Reviewed by நமதூர் செய்திகள் on 21:06:00 Rating: 5

No comments:

Powered by Blogger.