கம்யூனிஸ்ட் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - பாஜகவினருக்கு வலை!

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த மங்களூரில் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரை சிலர் அரிவாளால் வெட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முத்துப்பேட்டை அடுத்த மங்கலூர் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (45). இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர். நேற்று மாலை பைக்கில், மனைவி ராதாவுடன் கோவிலூர் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். மங்களுர் பிரிவு சாலை அருகே வந்த போது, கருப்பு நிற பொலீரோ காரில் வந்த ஒரு கும்பல், பாலசுப்பிரமணியனை மறித்தது. பாலசுப்பிரமணியத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் தடுக்க வந்த அதே பகுதியை சேர்ந்த அஜீத், வெங்கடேஷ் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் காரில் ஏறி தப்பியது.
படுகாயமடைந்த பாலசுப்பிரமணியத்திற்கு முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்பு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விசாரணையில், கடந்த ஆண்டு மங்களூர் கிராமத்தில் பிளக்ஸ் போர்டு வைத்தது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் பாலசுப்பிரமணியனை ஒரு தரப்பினர் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதில் தொடர்புடைய பாலமுருகன், பாலகணேஷ், விக்னேஷ், அய்யாறு ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் பாஜக மாவட்ட இளைஞர் அணி தலைவர் முருகேஷ், சுந்தரமூர்த்தி, தமிழ் வாணன், முருகேசன், மற்றொரு முருகேசன் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
கம்யூனிஸ்ட் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - பாஜகவினருக்கு வலை! கம்யூனிஸ்ட் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - பாஜகவினருக்கு வலை! Reviewed by நமதூர் செய்திகள் on 00:03:00 Rating: 5

No comments:

Powered by Blogger.