உள்ளாட்சி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்


நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் பழைய பேருந்துநிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலை ரத்து செய்து விட்டு, கால அவகாசம் அளித்து ஜனநாயக முறையில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். இடைத்தேர்தலில் மற்ற கட்சிகளை வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்து, வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களை கடத்தி அச்சுறுத்தலில் ஈடுபட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் வீ. ஞானசேகரன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலைச்செல்வன், பாலகிருஷ்ணன், ஜெயராமன், ராஜூ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் அழகர்சாமி, கணேசன், ராஜகுமாரன், அகஸ்டின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
உள்ளாட்சி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் உள்ளாட்சி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் Reviewed by நமதூர் செய்திகள் on 22:07:00 Rating: 5

No comments:

Powered by Blogger.