சென்னை மாநகராட்சி தேர்தலில் எஸ்.டி.பி.ஐ போட்டி!


சென்னை: நடைபெறவுள்ள சென்னை மாநகராட்சி இடைத் தேர்தலில் 35 வது வார்டில் எஸ்.டி.பி.ஐ.கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வட சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெரம்பூரில் நேற்று நடந்தது. இதில் ராயபுரம் ரயில் முனையம் திட்டத்தினை உடனடியாக தொடங்குதல், பெரம்பூர் தொகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி 35 வார்டு இடைத்தேர்தலில் பங்கு கொள்ள மாநில நிர்வாகத்திற்கு பரிந்துரைத்தல், மது ஒழிப்பினை கேரளா போன்று தமிழகத்திலும் படிப்படியாக அமலுக்கு கொண்டு வருதல், மக்களுக்கு பயன் தரும் திட்டங்களை மத்திய அரசு வகுக்க வலியுறுத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் முகமது ரசீத் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் எஸ்.எம்.தெஹலான் பாகவி, மாநில செயலாளர் அமீர் ஹம்சா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாவட்ட துணை தலைவர் அப்பாஸ் வரவேற்றார். மாவட்ட பொது செயலாளர் அப்துல் கரீம் அறிமுக உரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் கோபிநாத் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் வட சென்னை மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சென்னை மாநகராட்சி தேர்தலில் எஸ்.டி.பி.ஐ போட்டி! சென்னை மாநகராட்சி தேர்தலில் எஸ்.டி.பி.ஐ போட்டி! Reviewed by நமதூர் செய்திகள் on 23:42:00 Rating: 5

No comments:

Powered by Blogger.