முத்துப்பேட்டையில் பாஜக மற்றும் இந்து முன்னணியினர் நடத்திய கலவரம்: பாப்புலர் ஃப்ரண்ட், எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் பார்வையிட்டனர்!

முத்துப்பேட்டையில் பாஜக மற்றும் இந்து முன்னணியினர் நடத்திய கலவரம்: பாதிக்கப்பட்ட இந்து கடைகள் உட்பட அனைத்துப் பகுதிகளையும் பாப்புலர் ஃப்ரண்ட், எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் பார்வையிட்டனர்!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 3/9/14 அன்று பாஜக மற்றும் இந்து முன்னணியினர் நடத்திய விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில், கலவரம் ஏற்படுத்த்தும் வகையில் அங்குள்ள கடைகள் மற்றும் வீடுகளில் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பலத்த பாதுகாப்பு போடப்பட்டது மட்டுமின்றி காவல்துறை உயர் அதிகாரிகள் ஊர்வலம் செல்லும் இடங்களை பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல எடுத்தும் கூட காவல்துறையால் கலவரத்தை தடுக்க முடியவில்லை, கலவரத்தை தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர்.

இது போல நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையத்தில் தலித்கள் வசிக்கும் பகுதியில் இந்து முன்னணி, பாஜகவினர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது கற்களை வீசி தாக்குதல் நடத்திய போது காவல்துறையினர் தடியடி நடத்தியும், கலவரத்தை ஏற்படுத்தியவர்களை கைது செய்தும் துரித நடவடிக்கை எடுத்தது. இது போல நெல்லை மாவட்டம் நெல்லையப்பர் கோயில் வழியாக விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்ற இந்து முன்னணி மற்றும் பாஜகவினர், ஏற்கனவே அமைதிப் பேச்சுவார்த்தையில் ஊர்வலம் செல்ல தடைசெய்யப்பட்ட பாட்டப்பத்து மசூதி வழியாகசெல்ல முற்பட்டு கலவரத்தை ஏற்படுத்த முயன்ற போதும் காவல்துறையில் தடியடி நடத்தி கலவரம் ஏற்படாமல் இந்து முன்னணி மற்றும் பாஜகவினரை கைது செய்துதனர்.
இந்நிலையில் முத்துப்பேட்டையில் நடைபெற்ற இந்து முன்னணி மற்றும் பாஜகவினரின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான போலிஸார் போடப்பட்டும் கலவரத்தை தடுக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் தீயிடப்பட்ட இந்து சகோதரரின் கடைகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருவாரூர் மாவட்ட தலைவர் A.ஹாஜா, நகர தலைவர் மாலிக், முன்னால் மாவட்ட செயளாலர் விலாயத் ஹுசைன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் M.A. லத்தீப், நகர தலைவர் சேக்மைதீன்,முன்னால் மாவட்ட செயளாலர் நவாஸ், தலைமையில் குழு சந்தித்து ஆறுதல் கூறினர். பிறகு திருவாரூர் மாவட்ட S P அவர்களை சந்தித்தது, கலவரம் தூண்ட நினைத்த கயவர்களை உடனடியக கைது செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தியதோடு இனி நடைபெறாமல் இருக்க சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.


முத்துப்பேட்டையில் பாஜக மற்றும் இந்து முன்னணியினர் நடத்திய கலவரம்: பாப்புலர் ஃப்ரண்ட், எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் பார்வையிட்டனர்! முத்துப்பேட்டையில் பாஜக மற்றும் இந்து முன்னணியினர் நடத்திய கலவரம்:  பாப்புலர் ஃப்ரண்ட், எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் பார்வையிட்டனர்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:15:00 Rating: 5

No comments:

Powered by Blogger.