மேயர் பதவிக்கு காங்கிரஸ் திடீர் போட்டி!


கோவை: கோவை மாநகராட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு காங்கிரஸ் போட்டியிடவுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாக தலைமை அறிவித்தது. இருப்பினும் கோவையில், பாஜ, அதிமுகவுக்கு போட்டியாக காங்கிரஸ் திடீரென களம் இறங்கியுள்ளது.
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு காங்கிரசை சேர்ந்த தளபதி ரபீக் நேற்று மனுதாக்கல் செய்தார்.
மேலும் நாகர்கோவிலில் நகராட்சி 37வது வார்டுக்கு காங். விவசாய பிரிவு தலைவர் ஆர்.எஸ்.ராஜன், இரணியல் பேரூராட்சி 3வது வார்டுக்கு கணேசன், திங்கள்நகர் 13வது வார்டுக்கு செல்வம், குளச்சல் நகராட்சி 1வது வார்டுக்கு கலா ஆகியோர் இன்று காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்தனர்.
இதைப்போல் மேல்புறம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளை உள்ளடக்கிய மாவட்ட பஞ்சாயத்து முதல் வார்டுக்கு காங்கிரஸ் சார்பில் டி.கே. சேம் கிறிஸ்துகுமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மேல்புறம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வேனிஸ் மனுதாக்கல் செய்தார்.
மேயர் பதவிக்கு காங்கிரஸ் திடீர் போட்டி! மேயர் பதவிக்கு காங்கிரஸ் திடீர் போட்டி! Reviewed by நமதூர் செய்திகள் on 21:00:00 Rating: 5

No comments:

Powered by Blogger.