மக்கள் பணத்தை கொள்ளையடித்த ஜெயலலிதாவும், அவருக்கு ஆதரவு கொடுக்கும் அறிவுஜீவிகளும்!


மக்கள் பணத்தை கொள்ளையடித்த ஜெயலலிதாவும்,
அவருக்கு ஆதரவு கொடுக்கும் அறிவுஜீவிகளும்!

ஜெயலலிதா விற்கு தண்டனை அறிவித்த முதல் பல்வேறு தரப்பினர் 
ஊடகங்கள் உள்பட அவருக்கு ஆதவாக பேசி வருகின்றனர். 
66 கோடி சொத்துகுவிப்பு வழக்கில் அவர் தண்டனை பெற்றிருக்கிறார்.
ஆனால் ஜெயலலிதா கொள்ளையடிததோ மூவாயிரம் கோடிக்கும்மேல்.
அதை பேசாமல் வெறும் 66 கோடிதான் சொத்து சேர்த்தார் என்று பேசுகிறார்கள்.

அதேபோல் ஜெயலலிதா தமிழக மக்கள் உரிமைகளில் மிகச்சிறப்பாக செயல்பட்டார். அதனால் கர்நாடக பழிவாங்குகிறது, பாஜக பழிவாங்குகிறது, ராஜபக்சே பழிவாங்குகிறார் என்று இன ரீதியில் பேசுவது எந்த வகையில் நியாயம்.
ஜெயலலிதா விற்கு இந்த சூழ்நிலையை வைத்து பாஜக வளர்ந்து விடும் என்று இந்த தண்டனையை எதிர்ப்பது என்ன நியாயம்.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக வை தவிர வேறு எந்த கட்சியாலும் இங்கு வேரூன்ற முடியாது.

ராம்ஜெத்மலானி ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து  பேசுகிறார் என்பதை பெரிய சட்ட மாமேதை சொல்லிவிட்டார் என்று கூவுகிற ஊடகங்கள், அதே ராம்ஜெத்மலானி கனிமொழி நிரபராதி என்று அவருக்கு ஆதரவாக வாதாடும்போது இந்த ஊடகங்கள் எங்கே சென்றன.

முன்பு ஊழலுக்கு எதிராக போராடியவர்கள் எல்லாம் இன்று ஜெயலலிதாவிற்கு ஆதரவாக நிற்கிறார்கள். 

திரையுலகினர் போராட்டம்,
வணிகர்கள் கடையடைப்பு,
மாணவர்கள் போராட்டம்,
மீனவர்கள் போராட்டம்,

என இன்று தமிழகத்தில் பெரிய போராட்டம் நடைபெறுகிறது.
எதற்காக இந்த போராட்டம்?

  • மீனவர்கள் தாக்கப் பட்ட பொது இவர்கள் என்ன செய்தார்கள்?
  • மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கப்பட்ட போது என்ன செய்தார்கள்?
  • ஊனமுற்றவர்களை கோரிக்கைகளை செவிசயிக்காமல் அவர்களை தாக்கி அராஜகம் செய்த போது என்ன செய்தார்கள்?
  • பல்லாண்டு காலம் சிறையில் உள்ள அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்காக என்ன செய்தார்கள்?
  • இந்த ஆட்சியில் மூன்று ஆண்டுகளாக தொடரும் மின்தடை க்கு எதிராக என்ன செய்தார்கள்?
  • மின் தடையால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படும்போது என்ன செய்தார்கள்? 
  • தமிழகம் சீரழிய காரணமாக இருக்கும் மதுக்கடைகளுக்கு எதிராக என்ன செய்தார்கள்?
  • பல நாட்களாக கூடங்குளம் அணு உலைகெதிராக போராடும் மக்களுக்கு என்ன செய்தார்கள்?

தமிழக மக்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள் உள்ளபோது 
மக்கள் பணத்தை கொள்ளையடித்த ஜெயலலிதாவிற்கு 
ஆதரவாக நிற்பது வேதனை.
தமிழக மக்கள் இந்த கேடுகட்டவர்களை நிச்சயம் புறக்கணிப்பார்கள்.

மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அணைத்து அரசியல் வாதிகளுக்கும் 
இந்த தீர்ப்பு ஒரு பாடமாக இருக்கும்.

- வி களத்தூர் பாரூக்

மக்கள் பணத்தை கொள்ளையடித்த ஜெயலலிதாவும், அவருக்கு ஆதரவு கொடுக்கும் அறிவுஜீவிகளும்! மக்கள் பணத்தை கொள்ளையடித்த ஜெயலலிதாவும், அவருக்கு ஆதரவு கொடுக்கும் அறிவுஜீவிகளும்! Reviewed by நமதூர் செய்திகள் on 22:50:00 Rating: 5

No comments:

Powered by Blogger.