குஜராத் தேர்தல்: 6 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது எந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனால் தடைப்பட்டிருந்த ஆறு வாக்குச் சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை எட்டு மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
குஜராத் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல், கடந்த சனிக்கிழமை (டிச.9) மற்றும் வியாழக்கிழமை (டிச.14) என இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. விராம்காம், வத்கம், தஸ்க்ரோய், மற்றும் சாவ்லி ஆகிய நான்கு தொகுதிகளுக்குட்பட்ட ஆறு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவின்போது எந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து இந்த ஆறு வாக்குச்சாவடிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை எட்டு மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் திங்கட்கிழமை (நாளை) எண்ணப்படுகின்றன.
குஜராத் தேர்தல்: 6 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு குஜராத் தேர்தல்: 6 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு Reviewed by நமதூர் செய்திகள் on 23:26:00 Rating: 5

No comments:

Powered by Blogger.