பெரிய பாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு: ஆய்வாளர் முனிசேகர் மீது வழக்குப் பதிவு


சென்னை காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களைப் பிடிக்கச் சென்ற இடத்தில் குண்டுக் காயம் பட்டு காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் மாநிலக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
பெரியபாண்டியன் கொள்ளையர்களால் சுடப்பட்டதாக் கூறி வந்தநிலையில், பெரிய பாண்டியனுடன் சென்ற சக ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியால்தான் ஆய்வாளர் பெரியபாண்டி சுடப்பட்டுள்ளார் என்று அம்மாநிலத்தில் பாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் பார்கவ் கூறினார்.
இந்நிலையில், ராஜஸ்தான் போலீசார் முனிசேகர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அஜாக்கிரதையாக செயல்பட்டதன் மூலம் உயிரிழப்பு ஏற்படுத்தியதாக முனிசேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரிய பாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு: ஆய்வாளர் முனிசேகர் மீது வழக்குப் பதிவு பெரிய பாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு: ஆய்வாளர் முனிசேகர் மீது வழக்குப் பதிவு Reviewed by நமதூர் செய்திகள் on 23:28:00 Rating: 5

No comments:

Powered by Blogger.