இந்தியர்கள் அனைவரும் இந்துக்கள் என்பது முட்டாள்தனம்: சங்கராச்சார்யா

இந்தியர்கள் அனைவரும் இந்துக்கள் என்பது முட்டாள்தனம்: சங்கராச்சார்யா!
மதுரா(21 டிச 2017): இந்தியர்கள் அனைவரும் இந்துக்கள் என்பது முட்டாள்தனம் என்று சுவாமி சுவரூபானந்த் சங்கராச்சார்யா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ளவர்கள் அனைவரும் இந்துக்கள் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சுவாமி சுவரூபானந்த் சங்கராச்சார்யா இதுகுறித்து தெரிவிக்கையில், " முறையான சாஸ்திரமும் வேதங்களும் அறிந்தவர்கள்தான் இந்துக்கள். அதற்காக இந்தியர்கள் அனைவரும் இந்துக்கள் என்பது அறிவின்மை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் முஸ்லிம்கள் குர்ஆனையும் , ஹதீசையும் கற்றவர்களையே அவர்களும் உண்மையான முஸ்லிம்களாக கருதுகின்றனர் என்று தெரிவித்தார்.
அயோத்தி விவகாரத்தில் அரசியல் கட்சிகள் தலையிடுவதற்கும் சங்கராச்சார்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சங்கராச்சார்யாக்களுக்கும், தர்மாச்சார்யாக்களுக்கும் மட்டுமே உரிமை உண்டு என தெரிவித்தார்.
வாக்கு எந்திரத்திற்கு கடும் எதிர்ப்பு உள்ள நிலையில் வாக்குச் சீட்டு முறையை திரும்ப கொண்டு வருவதே சிறந்தது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தியர்கள் அனைவரும் இந்துக்கள் என்பது முட்டாள்தனம்: சங்கராச்சார்யா இந்தியர்கள் அனைவரும் இந்துக்கள் என்பது முட்டாள்தனம்: சங்கராச்சார்யா Reviewed by நமதூர் செய்திகள் on 03:56:00 Rating: 5

No comments:

Powered by Blogger.