ஜாகிர் நாயக் மீதான சர்வதேச குற்றவியல் வழக்குகள் ரத்து!

ஜாகிர் நாயக் மீதான சர்வதேச குற்றவியல் வழக்குகள் ரத்து!
புதுடெல்லி(16 டிச 2017): மத போதகர் ஜாகிர் நாயக் மீதான சர்வதேச குற்றவியல் வழக்குகளை ரத்து செய்யுமாறு இன்டெர்போல் வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச குற்றவியல் போலீஸ் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில் ஜாகிர் நாயக் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நீக்கம் செய்யுமாறு தெரிவித்துள்ளது.
ஜாகிர் நாயக் மீது இந்தியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்த குற்றச்சாட்டுகளை சர்வதேச குற்றவியல் போலீஸ் ஆய்வு செய்ததில் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் தெளிவு இல்லை என்றும் அதனை ஆய்வு செய்து உறுதி செய்ததை அடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜாகிர் நாயக் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ள இந்தியாவின் என்.ஐ.ஏ, அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜாகிர் நாயக் மீதான சர்வதேச குற்றவியல் வழக்குகள் ரத்து! ஜாகிர் நாயக் மீதான சர்வதேச குற்றவியல் வழக்குகள் ரத்து! Reviewed by நமதூர் செய்திகள் on 23:32:00 Rating: 5

No comments:

Powered by Blogger.