அஃப்ரஜுல் கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

அஃப்ரஜுல் கொலை வழக்கில் திடீர் திருப்பம்!
ஜெய்ப்பூர்(25 டிச 2017): ராஜஸ்தானில் லவ் ஜிஹாத் என்ற பொய்யான குற்றச்சாட்டில் முஹம்மது அஃப்ரஜுல் கொலை செய்யப்பட்ட வழக்கின் திடீர் திருப்பமாக கொலையாளிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருந்தது அம்பலமாகியுள்ளது.
மேற்கு வங்கத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி முஹம்மது அஃப்ரஜுல் என்பவர். இவர் ராஜஸ்தானில் வைத்து சம்புலால் என்பவனால் அடித்து மேலும் எரித்து கொலை செய்யப்பட்டார். இதனை கொலையாளி வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதோடு, லவ்ஜிஹாதில் ஈடுபடும் அனைவரும் இவ்வாறே தண்டிக்கப்படுவார்கள் என அந்த வீடியோவில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தான்.
இந்நிலையில் இந்த கொலையை செய்த சம்புலால் என்பவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே சம்புலால் கைதான பிறகு அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் சம்புலால் தனது மகளுடன் மேற்கு வங்கத்துக்கு யாருக்கும் தெரியாமல் ஓடி விட்டதாகவும், திரும்பி வந்த பின் அந்தப் பெண்ணை தனது குடும்பத்துக்கு தெரியாமல் தனியாக ஒரு வீட்டில் வைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் சமுதாயத்தில் தனது பெயர் வெளிவந்தால் தனது குடும்பத்தின் நற்பெயர் கெடும் என்பதால் போலீசுக்கு செல்லவில்லை எனவும் கூறியிருந்தார்.
இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து காவல்துறையினர் சம்புலாலிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சம்புலால் தன்னை ஒரு ஹீரோவாக காட்டிக் கொள்ள அஃப்ரஜுலை கொலை செய்ததாகவும், மேலும் தனக்கு வேறொரு பெண்ணுடன் இருக்கும் தொடர்பு வெளியானதல் அது இந்த கொலை மூலம் மறைக்கப்படும் என்றும். லவ் ஜிஹாதுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பில்லை என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.
மேலும் அஃப்ரஜுல் கிடைக்காவிட்டால் வேறு யாரையாவது கொலை செய்திருக்கக்கூடும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து சம்புலால் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அஃப்ரஜுல் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! அஃப்ரஜுல் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:04:00 Rating: 5

No comments:

Powered by Blogger.