மத உணர்வை புண்படுத்தியதாக டாக்டர் மீது முஸ்லிம் பெண் புகார்!

மத உணர்வை புண்படுத்தியதாக டாக்டர் மீது முஸ்லிம் பெண் புகார்!
பெங்களூரு(16 டிச 2017): பெங்களூரு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்போது முஸ்லிம் பெண் ஒருவரை மருத்துவர் கிருஷ்ணா கிருஷ்ணா என்று கூற வறுபுறுத்தியதை அடுத்து அவர் மீது பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரை சேர்ந்தவர் நசீமா பானு. இவருக்கு சிந்தாமனி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்கு அவர் தயாரானபோது மருத்துவர் நசீமா பானுவிடம் கிருஷ்ணா கிருஷ்ணா என்று சொல்லுமாறு வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் நசீமா பானு, "நான் ஒரு முஸ்லிம் நான் அல்லாஹ் என்று மட்டுமே கூறுவேன்" என்று கூறியுள்ளார். ஆனால் அதனை மருத்துவர் மறுத்ததோடு கிருஷ்ணா என்று கூறவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். மேலும் அப்படி கூறாவிட்டால் அறுவை சிகிச்சை செய்ய மட்டேன் என்றும் மருத்துவர் மிரட்டியுள்ளார்.
ஒருவழியாக அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின்பு நசீமா பானு போலீசில் டாக்டர் மீது புகார் அளித்தார். அதில் டாக்டர் மத உணர்வை புண்படுத்தியதாக அந்த புகாரில் கூறியுள்ளார்.
மத உணர்வை புண்படுத்தியதாக டாக்டர் மீது முஸ்லிம் பெண் புகார்! மத உணர்வை புண்படுத்தியதாக டாக்டர் மீது முஸ்லிம் பெண் புகார்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:33:00 Rating: 5

No comments:

Powered by Blogger.