ஹமாஸின் கனவு நிறைவேறியுள்ளது: இஸ்ரேல் எதிர்கட்சி குற்றச்சாட்டு!

இஸ்ரேல் மேற்க்கொண்ட போர் மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் ஹமாஸின் கனவு நிறைவேறியுள்ளதாக இஸ்ரேலின் எதிர்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
பலம் பிரயோகித்தால் இஸ்ரேலிடமிருந்து தங்களது நோக்கங்களை பெற்றுவிடலாம் என்ற செய்தியை போர் நிறுத்தம் ஒப்பந்தத்தின் மூலம் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸிற்கு அளித்துள்ளார் என்று இஸ்ரேலின் எதிர்கட்சி தலைவர் ஸவாவா கலோன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது; அடுத்த வாரம் ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் முன்வைக்கும் நிபந்தனைகளையும் இஸ்ரேல் ஏற்கவேண்டிய நிலை ஏற்படும்.மேற்கு கரை மற்றும் காஸாவோடும் காட்டிவரும் பிரிவினை கொள்கையை நிறுத்தவேண்டும். காஸாவின் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து யூத குடியேற்றவாசிகளை வெளியேற்ற முடிந்ததால் ஹமாஸ் தான் போரில் வெற்றியை ஈட்டியுள்ளது. காஸாவின் அருகில் உள்ள பகுதிகளில் இஸ்ரேல் குடிமக்களின் விவகாரத்தில் அரசு எதுவும் செய்யவில்லை.இவ்வாறு ஸாவாவா தெரிவித்தார்.
ஹமாஸின் கனவு நிறைவேறியுள்ளது: இஸ்ரேல் எதிர்கட்சி குற்றச்சாட்டு! ஹமாஸின் கனவு நிறைவேறியுள்ளது: இஸ்ரேல் எதிர்கட்சி குற்றச்சாட்டு! Reviewed by நமதூர் செய்திகள் on 03:10:00 Rating: 5

No comments:

Powered by Blogger.