வி.களத்தூரில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின கிராம சபை கூட்டம்!



வி.களத்தூரில் நேற்று (15-8-14)சுதந்திர தினத்தையொட்டி கிராம சபா கூட்டம் நடைபெற்றது. இதில் நீர் வடித்திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரே இந்த குழுவில் உள்ளதாகவும் இதை மாற்றிஅமைக்க கொடுத்த கோரிக்கையை பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்தக் கோரிக்கை இந்த குழுவை மாற்றி அனைத்து சமூகத்தனரும் இருக்கும் படி நீர் வடித்திட்ட குழு அமைக்கப்பட உள்ளது. இந்த கோரிக்கை கடந்த ஆண்டு கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


அதே போல் 100நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நமதூர் ஏரியின் கிழக்குப்பகுதி சீரமைத்து அப்பகுதியில் கையகப்படுத்தி இருந்த அரசு இடங்களை திருப்பப்பட்டது. இதை போல் இனி வரும் ஏரியின் மேற்குப்பகுதியும் இதே முறையில் சுத்தப்படுத்தி புறம்போக்கு இடங்களை கையகப்படுத்த தீர்மானம் இயற்றப்பட்டது. இந்த கிராம சபா கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். 

நன்றி  : கல்லாறு.காம் 






வி.களத்தூரில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின கிராம சபை கூட்டம்! வி.களத்தூரில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின கிராம சபை கூட்டம்! Reviewed by நமதூர் செய்திகள் on 04:13:00 Rating: 5

No comments:

Powered by Blogger.