பொய் பிரச்சாரத்தை புறக்கணியுங்கள்:எஸ்.டி.பி.ஐ!


புதுடெல்லி: எஸ்.டி.பி.ஐ கட்சியின் செயல்பாடுகளினால் ஏற்பட்ட பயமும், பொறாமையுமே சில இடங்களில் வந்தேமாதரம் பாடுவது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ மீது அவதூறு பிரச்சாரங்களை நடத்துவதாக கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அஃப்ஸல் பாஷா வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதுத்தொடர்பாக மேலும் அவர் கூறியிருப்பது:மதச் சார்பற்ற இந்தியாவில் ஒரு மதத்தினரின் உணர்வை காயப்படுத்தும் வகையிலான காரியங்களை அதிகாரப்பூர்வமாக திணிப்பது தேச நலனுக்கு எதிரானது என்ற கருத்து எஸ்.டி.பி.ஐக்கு
உண்டு.கேரளாவில் எங்குமே வந்தேமாதரம் பாடுவதை பலம் பிரயோகித்து தடுக்கவில்லை.கேரளாவில் உள்ள ஊடகங்களில் இச்சம்பவம் ஒரு சர்ச்சைக்குரிய விஷயமே அல்ல.
அகில இந்திய அளவில் வகுப்புவாதத்தை பரவலாக்க முயற்சிக்கும் சில சக்திகள்தாம் இந்த அவதூறுப் பிரச்சாரத்தின் பின்னால் உள்ளனர்.இந்த பிரச்சாரத்தை புறக்கணிக்கவேண்டும் என்று அஃப்ஸல் பாஷா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- See more at: http://www.thoothuonline.com/archives/68187#sthash.eWFEXocL.dpuf
பொய் பிரச்சாரத்தை புறக்கணியுங்கள்:எஸ்.டி.பி.ஐ! பொய் பிரச்சாரத்தை புறக்கணியுங்கள்:எஸ்.டி.பி.ஐ! Reviewed by நமதூர் செய்திகள் on 02:55:00 Rating: 5

No comments:

Powered by Blogger.