பெண் போராளி இரோம் ஷர்மிளா மீண்டும் கைது!


இம்பால்: மணிப்பூரில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த போராளி இரோம் ஷர்மிளா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, 14 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வரும் இரோம் ஷர்மிளா கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிறை வைக்கப்பட்டு இருந்தார். இவரை கடந்த இரு தினங்களுக்கு முன்பு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் மீண்டும் போராட்டத்தை ஷர்மிளா தொடங்கியுள்ளார். இதையடுத்து, அவரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

பெண் போராளி இரோம் ஷர்மிளா மீண்டும் கைது! பெண் போராளி இரோம் ஷர்மிளா மீண்டும் கைது! Reviewed by நமதூர் செய்திகள் on 02:49:00 Rating: 5

No comments:

Powered by Blogger.