பெரம்பலூரில் தமிழ்நாடு டெவலப்மெண்ட் பவுண்டேசன் ட்ரஸ்ட் (TNDFT) சார்பாக நடைபெற்ற பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி!


பெரம்பலூரில் தமிழ்நாடு டெவலப்மெண்ட் பவுண்டேசன் ட்ரஸ்ட் (TNDFT) சார்பாக நடைபெற்ற பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி!
பெரம்பலூரில் தமிழ்நாடு டெவலப்மெண்ட் பவுண்டேசன் ட்ரஸ்ட் (TNDFT) சார்பாக 24.08.2014 அன்று காலை 10.40 மணியளவில் பெரம்பலூரில் நிஸ்வான் மஹாலில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாற்று மத சகோதர - சகோதரிகள் திரளாக கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் இமாம் இப்ராஹிம் மூஸா அவர்கள் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் காஜா சரீப் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் அமீர் பாஷா M.Com அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கு ACPA ட்ரஸ்ட் நிறுவனர் பெரம்பலூர் திரு. ஆ.கலியபெருமாள், VKC மாவட்ட செய்தி தொடர்பாளர் திரு.பேரா.முருகையன் அவர்கள், VKC மாவட்ட செயலாளர் திரு.ஜெ.தங்கதுரை மற்றும் SDPI கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் முஹமது ரபிக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய அழைப்பாளர் TNDFT முகம்மது முபாரக் அலி அல்தாபி மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் பசீர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் கேள்வி, பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாற்று மத சகோதர - சகோதரிகள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அழகான முறையில் விளக்கம் கொடுத்தது அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்நிகழ்ச்சியில் சர்தார் அவர்கள் நன்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதியம் விருந்து உபசரிப்பும், திரு குர்ஆனும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சுமார் 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.










பெரம்பலூரில் தமிழ்நாடு டெவலப்மெண்ட் பவுண்டேசன் ட்ரஸ்ட் (TNDFT) சார்பாக நடைபெற்ற பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி! பெரம்பலூரில் தமிழ்நாடு டெவலப்மெண்ட் பவுண்டேசன் ட்ரஸ்ட் (TNDFT) சார்பாக நடைபெற்ற பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி! Reviewed by நமதூர் செய்திகள் on 21:41:00 Rating: 5

No comments:

Powered by Blogger.