வி. களத்தூர் ஜமாஅத் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று (22.12.2013) காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.

1526538_459467707491997_2048676332_n
நமது வி.களத்தூர் ஜமாஅத்தின் சார்பாக நமதூர் மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று (22.12.2013) காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.
வி.களத்தூர் பள்ளிவாசலின் உள் அரங்கில் நடைப்பெற்ற இந்த சட்ட விழிப்புணர்வு முகாமுக்கு ஜமாஅத்தின் தலைவர் ஜனாப் T.S.E. லியாகத் அலி அவர்கள் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின்  வழக்கறிஞர். N.M.ஷாஜஹான் B.Sc., BL., அவர்கள் கலந்துக் கொண்டார். காவல்துறை மற்றும் உளவுத்துறையினரிடம் நமது அணுகுமுறை எவ்வாறு  இருக்க வேண்டும் என்பதை விளக்கமாக எடுத்துக் கூறினார். மேலும் நடைமுறையில் உள்ள பொதுவான சட்ட ஆலோசனைகளை வழங்கினார். பிறகு பொதுமக்களின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் உதாரணங்களுடன் விளக்கம் கொடுத்தார்.
இந்த சட்ட முகாமில் நிறைய சட்டம் சம்மந்தமான விவரங்களை தெரிந்துக் கொண்டதாக முகாமில் கலந்துக் கொண்டவர்கள் கூறினார்கள்.



1526238_459467614158673_621776642_n

வி. களத்தூர் ஜமாஅத் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று (22.12.2013) காலை 11.00 மணியளவில் நடைபெற்றது. வி. களத்தூர் ஜமாஅத் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று (22.12.2013) காலை 11.00 மணியளவில் நடைபெற்றது. Reviewed by நமதூர் செய்திகள் on 04:18:00 Rating: 5

No comments:

Powered by Blogger.