இஃவானுல் முஸ்லிமீனுக்கு தடை:டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி கண்டனம்!

தோஹா: முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை தடைச் செய்த ராணுவ சர்வாதிகார அரசின் நடவடிக்கையை உலக முஸ்லிம் அறிஞர்களின் அவையின் தலைவர் டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுக்குறித்து அவர் கூறியிருப்பது: இஃவானுல் முஸ்லிமீனை தடைச் செய்ய அரசு கண்டுபிடித்த குற்றமான மன்சூராவில் நிகழ்ந்த கார்க் குண்டு வெடிப்பிற்கு ராணுவமே சதித்திட்டம் தீட்டியது.
இஃவானுல் முஸ்லிமீனை தடைச் செய்வதன்மூலம் எகிப்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தர்ம ஸ்தாபனங்கள் மூடப்படும்.ராபிஆ அல் அதவிய்யாவில் அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது சரமாரியாக சுட்டவர்களே உண்மையில் தீவிரவாதிகள்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை தீக்கிரையாக்கி, பெண்களை கூட கைதுச் செய்து, துன்புறுத்தியவர்கள்தாம் தீவிரவாதிகள் என்று யூசுஃப் அல் கர்ளாவி தெரிவித்தார்.

இஃவானுல் முஸ்லிமீனுக்கு தடை:டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி கண்டனம்! இஃவானுல் முஸ்லிமீனுக்கு தடை:டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி கண்டனம்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:47:00 Rating: 5

No comments:

Powered by Blogger.