நீதித்துறை நீதிபதிகள் நியமனத்தில் போதுமான பிரதிநிதித்துவம் வழங்க கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஒருநாள் கவன ஈர்ப்பு அமைதிப்போரட்டம்...

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணியின் சிறப்பு செயற்குழுக்கூட்டம் சென்னையில் வழக்கறிஞர் அணியின் மாநில தலைமையகத்தில் நேற்று மாலை 7 மணியளவில் வழக்கறிஞர் அணியின் மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் த. பார்வேந்தன் தலைமையில் நடந்தது.  

இக்கூட்டத்தில், நீதித்துறையில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனங்களில் தலித்துகளுக்கு (பட்டியல் இனத்தவர்)அவர்களின் மக்கள்தொகைக்கேற்ப போதுமான பிரதிநிதித்துவம் அல்லது உரிய பங்கு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.
இக்கோரிக்கையை வலியுறித்தி கடந்த 30-01-2016 அன்று உயர்நீதி மன்ற தலைமை நீதியரசர் உயர்திரு சஞ்ஜய் கிசன் கவுல் அவர்களுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் வழக்குரைஞர் தொல்.திருமாவளவன் மனு அளித்துள்ளார்.
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 41 இடங்களை நிரப்பும் பணிகள் நடைபெறுவதாக அறிகிறோம்.
இந்நிலையில், ஏற்கனவே அளவுக்கதிகமாக உள்ள சமூகத்தவர்களை தற்போது மேலும் நியமிப்பதை தற்போது தவிர்ப்பதன் மூலம், பிரதிநிதித்துவமே இல்லாத சமூகங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்குவதுடன் 178 சாதிகளை உள்ளடக்கிய (பட்டியல் இனத்தவர்) மக்கள் தொகையில் 25 சதவீதம் உள்ள தலித்துகளுக்கு 19 பேர் நீதிபதிகளாக இருக்க வேண்டிய சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒட்டு மொத்தமாக 15 வழக்குரைஞர்களை முன்னுரிமை அளித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் உயர்திரு. சஞ்சய் கிஷன் கவுல் அவர்கள் பரிந்துரை செய்ய வேண்டுமெனக் கோருகிறோம்.
இக்கோரிக்கையை வலியுறுத்தியும், இக்கோரிக்கையின் நியாயத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் இம்மாத இறுதியில் சென்னை உயர்நீதிமன்ற பிரதான நுழைவு வாயிலருகில் வருகின்ற மார்ச்-3 (திங்கட்கிழமை) அன்று “ஒருநாள் கவன ஈர்ப்பு அமைதிப்போராட்டம்” நடத்துவதெனவும்,
இப்போராட்டத்திற்க்கு, மாநில அளவில் செயல்படும் பல்வேறு சமூக நீதிக்கான அமைப்புகளையும், அரசியல் கட்சிகளையும் மற்றும் அனைத்து தலித் அமைப்புகளையும் பங்கெடுக்க வைப்பதென ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞரணியின் மாநில துணைச் செயலாளர்கள் வழக்குரைஞர் இரா.சீனிவாச ராவ், அ.காசி, சூர.விஸ்வநாதன், சென்னை உயர்நீதிமன்ற அமைப்பாளர்கள் பார்த்திபன், இளங்கோ, இராஜிவ்காந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நீதித்துறை நீதிபதிகள் நியமனத்தில் போதுமான பிரதிநிதித்துவம் வழங்க கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஒருநாள் கவன ஈர்ப்பு அமைதிப்போரட்டம்... நீதித்துறை நீதிபதிகள் நியமனத்தில் போதுமான பிரதிநிதித்துவம் வழங்க கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஒருநாள் கவன ஈர்ப்பு அமைதிப்போரட்டம்... Reviewed by நமதூர் செய்திகள் on 23:50:00 Rating: 5

No comments:

Powered by Blogger.