வி.களத்தூரில் இன்று (அக் 26) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

வி களத்தூரில் இன்று (அக் 26) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான சிறப்பு முகாம்  நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2015-ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி 15.10.2014 முதல் 10.11.2014 வரை நடைபெறுகிறது.
அதன்படி, 1.1.2015-ம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு 18 வயது பூர்த்தியான நபர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், முகவரி ஆகிய திருத்தங்களை மெற்கொள்ளவும், பெயரை நீக்கம் செய்யவும் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான சிறப்பு முகாம் இன்று (அக் 26)  மற்றும் நவ. 2-ம் தேதிகளில் அந்தந்த வாக்கு சாவடிகளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
அதனால் வி களத்தூர் பெண்கள் நடுநிலை பள்ளியில் 
காலை 8 மணிமுதல் நடைபெற்று வருகிறது.
இதில் வி. களத்தூர் பொதுமக்கள் புதியதாக சேர்க்கவும், திருத்தங்களை மேற்கொள்வதற்காக அதிகளவில் கலந்து கொண்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தார்கள். விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய இயலாதவர்களுக்கு இளைஞர்கள் உதவி செய்தனர்.   
விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய தேவையான ஆவணங்கள் :
1. குடும்ப அட்டை நகல் 
2. 2 போட்டோ 
3. பிறந்த சான்றிதல் (அ) பள்ளி மாற்று சான்றிதல்.  

முகாமில் எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக :






வி.களத்தூரில் இன்று (அக் 26) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. வி.களத்தூரில் இன்று (அக் 26) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான சிறப்பு முகாம்  நடைபெற்றது. Reviewed by நமதூர் செய்திகள் on 00:25:00 Rating: 5

No comments:

Powered by Blogger.