யார் தீவிரவாதி?


சினிமாவில் ஜாதி பெயரை சொல்லி அவனுடைய ஜாதியின் பெயரை சொல்லி அவனை விமர்சிக்க சென்சார் மறுக்கப்படுகிறது..
கறுப்பாக ஒருவனை காட்டி தாழ்த்தப்பட்டவன் என்று சொல்வார்களே தவிர அவன் ஜாதி பெயரை சொல்ல மாட்டார்கள்..
காரணம் ஜாதி கலவரம் உருவாகும் மாறாக சென்ஸாரும் தடை செய்துள்ளது., அதை அனுமதிக்காது..
ஆனால் இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று சொல்லியே ஒரு சமுகத்தை சித்தரிக்கின்றனர்..
இந்தியாவின் பெரிய தூண்., இரண்டாவது நம்பிக்கை என்று சொல்லும் ஊடகத்தின் நிலைமை இன்று படுகேவலமாக உள்ளது..
ஓர் சாராருக்கே தங்களுடைய ஆதரவும்,. காசு கொடுத்தால் தாய் நாட்டையே கூட்டி கொடுப்போம் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது.. (ஒரு சில நல்ல ஊடகங்களை தவிற)
இது எவளோ பெரிய கொடுமை..
முஸ்லிம்கள் குண்டு வைக்கிறார்கள் அதனால் தான் சினிமாவில் காட்டுகிறார்கள் என்று வேற கூறுகிறார்கள்..
குண்டு வெடித்தவுடன் ஊடகம் தானாகவே ஒரு இயக்கத்தின் பெயரை கண்டுபிடித்து இஸ்லாமியர்களை சிக்க வைக்கின்றனர்.. சூடாக குண்டு வெடித்தவுடன் அந்த செய்தியை மக்களும் நம்பி வடுகின்றனர்..
அதன் பிறகு நடந்தது என்ன என்பதை யாராவது காட்டுகிறார்களா..?
இந்தியாவில் மட்டும் நடந்த குண்டு வெடிப்புகளுக்கும் மத கலவரங்களுக்கும் ஜாதி கலவரங்களுக்கும் முக்கிய காரணமாக உருதுணையாக இருந்தது சங்பரிவார் ஆர்.எஸ்.எஸ்., சிவ சேனா போன்ற அமைப்புகளே நடத்தியுள்ளது என்று ஆய்வுகள் சொல்கிறது..
கிழே குறிப்பிட்டவைக்கு காரணம் யார்
முக்கிய குறிப்பிட்ட சம்பவங்கள் இங்கு கூறுகின்றேன் முடிந்தால் பதில் கூறுங்களேன்..
1) சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?
2.சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?
3) மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?
4) அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?
5)கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ?
6) மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ?
7) நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ?
8)குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தவன் யார் ?
9) நாடு முழுவதும் கலவரத்தை நடத்துபவன் யார் ?
10) நம் தேசத்தந்தை மகாத்மா அவர்களை கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியை கொன்றவன் யார் ?
11)கோவையில் கலவரத்தை திட்மிட்டு நடத்தியவன் யார்..?
12) பெங்களூரில் பாகிஸ்த்தான் கொடியை ஏற்றி தேச துரோக செயலை செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழியை போட்டு பிறகு மாட்டி கொண்டவன் யார் ?
13)மாவீரன் கார்க்ரேவை கொன்றவன் யார் ?
14)ஆந்திராவில் மாட்டு தலையை வெட்டி போட்டு கலவரத்தை தூண்டியவன் யார்?
15) பாபர் மஸ்ஜித்தை இடித்து தரைமட்டமாக்கி உலக அரங்கில் இந்தியாவை தலை குனிய வைத்தவன் யார் ?
16) இந்த நாட்டின் இறையாண்மையை இல்லாமல் ஆக்குபவன் யார் ?
2003 மார்ச் 13:- மும்பை ரெயிலில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி.
2003 ஆக 25:- மும்பையில் 2 கார் குண்டுகள் வெடித்து 60 பேர் பலி.
2005 அக் 29:- டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 60 பேர் பலி.
2006 மார்ச் 7:- காசியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 15 பேர் பலி.
2006 ஜூலை 11:- மும்பை ரெயில்களில் 7 குண்டுகள் வெடித்தன. 180 பேர் பலி.
2006 செப் 8:- மலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் 35 பேர் பலி.
2007 பிப் 19:- பாகிஸ்தானுக்கு சென்ற ரெயிலில் குண்டு வெடித்து 66 பயணிகள் பலி.
2007 மே 18:- ஐதராபாத் மசூதியில் குண்டு வெடித்து 11 பேர் பலி.
2007 ஆக 25:- ஐதராபாத்தில் நடந்த தொடர்குண்டு வெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
2008 மே 13:- ஜெய்ப்பூரில் 7 இடங்களில் குண்டு வெடித்தது. 63 பேர் பலி.
2008 ஜூலை 25:- பெங்களூரில் 8 இடங்களில் குண்டு வெடித்தது. 1 பெண் பலி.
2008 ஜூலை 26:- ஆமதாபாத்தில் 16 இடங்களில் குண்டு வெடித்தது. 45 பேர் பலி
2008 செப் 13:- டெல்லியில் அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டு வெடித்தது.
23 பேர் பலி. அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று சங்பரிவார் பயங்கரவாதிகளால் திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்று நடத்தப்பட்டது.
இதில் 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.
ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் பட்சிலம் குழந்தைகளை வெட்டி கிழித்து இரு கூராக்கினார்கள். மேலும் நெருப்பு குண்டம் வளர்த்து அதில் பெண்களின் கைகளில் இருந்த குழந்தைகளை பறித்து போட்டனர். அந்த குழந்தைகள் தீயில் கருகி சாவதை பார்த்து ரசித்து பேரானந்தம் அடைந்தனர்.
மறக்கப்பட்ட நெல்லி இனப்படுகொலை இந்தியாவில் சங்பரிவார் நடத்திய தொடர் இனப்படுகொலைகளின் ஒரு முன்னோட்ட மாகவே பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே டெல்லியில் 1984லும், பாகல்பூரில் 1989லும், மும்பையில் 1993லும் நாடு தழுவிய இனப்படுகொலைகள் நடைபெற்றன.
இதனுடைய உச்சகட்ட நிகழ்வுதான் குஜராத் இனப்படுகொலை. அதன் தொடர்ச்சிதான் இப்போது இந்தியா முழுவதும் சங்பரிவார் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகள்.பாகல்பூர் கலவரம்: பீகார் மாநிலம் பாகல்பூரில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக சங்பரிவார் தீவிரவாதிகளால் 1989 ல் கலவரம் நடத்தப்பட்டது. இதில் முஸ்லிம்கள் 116 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த கலவரத்தை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கமும் அதன் துணை அமைப்புகளும் திட்டமிட்டு நடத்தின. ஜக்தீஷ்பூர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் ராமச்சந்திர சிங் மற்றும் கிராமத்தலைவர் தாக்குர் பாஸ்வான் ஆகியோர் இந்த படுகொலைக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டனர்.
இதன் மூலம் சொந்த நாட்டில் 30,000 பேரை அகதிகளாக்கி, 3000க்கும் மேற்பட்ட வீடுகளைச் சூறையாடி, ஒரு பெரும் இன அழிப்பை நடத்தினர் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள்.
இந்த அனைத்து சம்பவங்களிலும் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சங்பரிவார் சக்திகள் என்ன ஆயிற்று..??? எங்கே அனைவரும்.. கேட்டால் அதலாம் கிடையாது நீ தீவிரவாதி தான்..
என்னயா நீயாயம்..
இதில் பல இஸ்லாமியரை விசாரனைக்காக இன்றும் வெளிவர முடியாமல் விசாரித்து கொண்டு இருக்கினறனர் 10ஆண்டுகளுக்கு மேலும் ஆகி விட்டது விசாரனை இன்னும் முடியவில்லை.., எந்த சம்பவத்திற்காக அவர்கள் கைது செய்ப்பட்டார்களோ அந்த சம்பவத்திற்கான உண்மை குற்றவாளிகள் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகள் வெளிவே உலா வருகின்றனர்.. இன்றும் நம்முடைய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சிறையில் வாடும் அப்பாவி சிறைவாசிகளுக்காக அயராது குரல் கொடுத்து வருகிறது.. ஆனால் ஊடகம் நம்முயை குரலை வெளி கொண்டு வராது..
முஸ்லிம்கள் தவறுகள் செய்தால் அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று தான். அச்செயல் உண்மையென இருந்தால் அவர்களுக்கு தண்டனையும் கொடுக்கலாம் ஏன் தூக்கில் கூடயிடலாம் ஏனெனில் இஸ்லாம் இதைப்போன்ற தீவிரவாத செயல்களை ஆதரிக்கவும் இல்லை -அங்கீகரிக்கவும் இல்லை.
ஆனால் மேற்கத்திய ஊடகங்கள் கொடுக்கும் செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு தொப்பியையும்- தாடியையும் தீவிரவாதத்தின் அடையாளமாக்க வேண்டாம் என்பதே என் போன்றோர்களின் வேண்டுகோள்!
இதை அதிகமாக ஷேர் செய்யவும்
- முஹம்மது சுல்தான்
யார் தீவிரவாதி? யார் தீவிரவாதி? Reviewed by நமதூர் செய்திகள் on 04:35:00 Rating: 5

No comments:

Powered by Blogger.