வி.களத்தூரில் நடந்த வாலிபால் போட்டியில் முதல் பரிசை லப்பைகுடிகாடு எம்ஆர்எப் அணி வென்றது

வி களத்தூரில் பாப்புலர் ப்ரண்டின் சார்பாக ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் பிச்சாரத்தின் ஒருபகுதியாக 

இன்று (22.10.2014) வாலிபால் போட்டி நடைபெற்றது. 
இப்போட்டியை வி.களத்தூர் காவல் உதவி ஆய்வாளர் விவேக் அவர்கள் துவக்கி வைத்து சிறிது நேரம் பேசினார்கள். 

அவருக்கு PFI அமைப்பினர் திருக்குர்ஆன் தமிழாக்கத்தை வழங்கினார்கள்.
அதனைதொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின.

பல அணிகள் விளையாடியதால் மாலை வரை 
பல சுற்றுகளாக போட்டிகள் நடந்தன.
இறுதி சுற்றில் வி களத்தூர் டிவிசி அணியும், 
லப்பைகுடிகாடு எம்ஆர்எப் அணியும் மோதின.
சம பலத்துடன் திகழும் இரு அணிகளும் வெற்றி பெற 
அருமையாக விளையாடினார்கள்.

இறுதியில் லப்பைகுடிகாடு எம்ஆர்எப் அணி வெற்றி பெற்று முதல் பரிசை வென்றது. வி களத்தூர் டிவிசி அணி இரண்டாம் பரிசை வென்றது.

வருகிற 01.11.2014 ம் தேதி நடைபெறும் தெருமுனை பிரச்சாரம் & பரிசளிப்பு விழாவில் இரு அணிக்கும் பரிசு வழங்கப்படும்.

இந்த விளையாட்டு போட்டியில் பொதுமக்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.









வி.களத்தூரில் நடந்த வாலிபால் போட்டியில் முதல் பரிசை லப்பைகுடிகாடு எம்ஆர்எப் அணி வென்றது வி.களத்தூரில் நடந்த வாலிபால் போட்டியில்  முதல் பரிசை லப்பைகுடிகாடு எம்ஆர்எப் அணி வென்றது Reviewed by நமதூர் செய்திகள் on 06:43:00 Rating: 5

No comments:

Powered by Blogger.