வி களத்தூரில் நடைபெற்ற கபாடி போட்டியில் லப்பைகுடிகாடு அசார் பிரதர்ஸ் அணி முதல் பரிசை தட்டி சென்றது.

வி களத்தூரில் பாப்புலர் ப்ரண்டின் சார்பாக ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் பிச்சாரத்தின் ஒருபகுதியாக 
இன்று (23.10.2014) கபாடி போட்டி நடைபெற்றது. 

இப்போட்டியை வி.களத்தூர் ஜாமாஅத் செயலாளர் 
A.பஷீர் அஹ்மத் அவர்கள் துவக்கி வைத்து சிறிது நேரம் பேசினார்கள். 
அதனைதொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின.

சிறியவர்களுக்கு தனியாகவும்,பெரியவர்களுக்கு தனியாகவும் போட்டிகள் நடந்தன.மொத்தம் 16 அணிகள் விளையாடிது. 

சிறியவர்கள் போட்டியில் இறுதி சுற்றில் வி களத்தூர்  டைகர் வாரியர்ஸ், ரைடர் வாரியர்ஸ் வெற்றிகளை பெற்றார்கள்.

பெரியவர்கள் போட்டியில் இறுதி சுற்றில் லப்பைகுடிகாடு அசார் பிரதர்ஸ், வடகரை அணியும் மோதின.வெற்றிபெற இரு அணிகளும் கடுமையாக போராடினார்கள்.இறுதியில் லப்பைகுடிகாடு அசார் பிரதர்ஸ் அணி வெற்றி பெற்று 
முதல் பரிசை வென்றது. 

வடகரை அணி இரண்டாம் பரிசை வென்றது.
வருகிற 01.11.2014 ம் தேதி நடைபெறும் தெருமுனை பிரச்சாரம் & பரிசளிப்பு விழாவில் இரு அணிக்கும் பரிசு வழங்கப்படும்.

இந்த விளையாட்டு போட்டியில் பொதுமக்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.

வருகிற 26.10.2014 ம் தேதி சிறுவர்களுக்கான விளையாட்டுபோட்டி நடைபெறுவதாக பாப்புலர் ப்ரண்ட் அமைப்பினர் தெரிவித்தனர்.














வி களத்தூரில் நடைபெற்ற கபாடி போட்டியில் லப்பைகுடிகாடு அசார் பிரதர்ஸ் அணி முதல் பரிசை தட்டி சென்றது. வி களத்தூரில் நடைபெற்ற கபாடி போட்டியில்  லப்பைகுடிகாடு அசார் பிரதர்ஸ் அணி முதல் பரிசை தட்டி சென்றது. Reviewed by நமதூர் செய்திகள் on 22:31:00 Rating: 5

No comments:

Powered by Blogger.