குஜராத்தில் அதிர்ச்சி: ஒரே நாளில் 9 குழந்தைகள் பலி!

குஜராத்தில் அதிர்ச்சி: ஒரே நாளில் 9 குழந்தைகள் பலி!
ஆமதாபாத்(29 அக் 2017): குஜராத்தில் ஒரே நாளில் 9 பிறந்த குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மஹிசாகர் மாவட்டம் லுனாவாடா அரசு மருத்துவமனையில் 9 பிறந்த குழந்தைகள் பலியாகியுள்ளன. அதில் 5 குழந்தைகள் பல்வேறு மருத்துவமனைகளிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு லுனாவாடா அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப் பட்ட குழந்தைகளாகும்.
பல்வேறு காரணங்களால் சரியாக சிகிச்சை வசதி இல்லாமல் சுமார் 130 கி.மீ தூரத்திலிருந்து லுனாவாடா மருத்துவமனைக்கு கொண்டுவரப் பட்ட குழந்தைகள் பலியானதாக மருத்துவமனை அதிகாரி எம்.எம்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
9 குழந்தைகள் மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குஜராத்தில் அதிர்ச்சி: ஒரே நாளில் 9 குழந்தைகள் பலி! குஜராத்தில் அதிர்ச்சி: ஒரே நாளில் 9 குழந்தைகள் பலி! Reviewed by நமதூர் செய்திகள் on 00:02:00 Rating: 5

No comments:

Powered by Blogger.