எஸ்டிபிஐ மாநில பேச்சாளர் மரணம் - தெஹ்லான் பாக்கவி இரங்கல்!

எஸ்டிபிஐ மாநில பேச்சாளர் மரணம் - தெஹ்லான் பாக்கவி இரங்கல்!
சென்னை(28 அக் 2017): எஸ்டிபிஐ கட்சியின் மாநில பேச்சாளர் திருப்பூர் அமானுல்லா விபத்தில் மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு எஸ்டிபிஐ மாநில தலைவர் தெஹ்லான் பாக்கவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், "பொது வாழ்வில் மிகுந்த ஈடுபாடுட்டுடனும், அனைத்து தரப்பு மக்களின் சமூக முன்னேற்றத்திற்காகவும் தீவிரமாக களப்பணியாற்றி வந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருப்பூர் மாவட்ட முன்னாள் தலைவரும், கட்சியின் மாநில பேச்சாளருமான திருப்பூர் அமானுல்லா அவர்கள் இன்று காலை விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழ்ந்துள்ள செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
இறைவனின் நாட்டப்படி இந்த மரணம் நிகழ்ந்தாலும், துடிப்புமிக்க இளைஞராக கட்சி மற்றும் சமூகத்திற்காக உழைத்து வந்த அவரின் மரணம் ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். அமானுல்லா அவர்களின் இழப்பால் பெரும் துயரில் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறப்பாக அமையவும், அவரின் குடும்பத்தினருக்கு இறைவன் அழகிய பொறுமையை வழங்கவும் இறைவனை பிரார்த்திப்போம்." என்று அதில் கூறப்பட்டுள்ளது.
எஸ்டிபிஐ மாநில பேச்சாளர் மரணம் - தெஹ்லான் பாக்கவி இரங்கல்! எஸ்டிபிஐ மாநில பேச்சாளர் மரணம் - தெஹ்லான் பாக்கவி இரங்கல்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:03:00 Rating: 5

No comments:

Powered by Blogger.