பாஜக மகளிரணி செயலாளர் ஜெமீலா கட்சியிலிருந்து திடீர் ராஜினாமா!

பாஜக மகளிரணி செயலாளர் ஜெமீலா கட்சியிலிருந்து திடீர் ராஜினாமா!
சென்னை(21 அக் 2017): தமிழக பாஜக மகளிரணி செயலாளர் டாக்டர் ஜெமிலா கட்சிப் பொறுப்புகள் அனைத்திலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பிரிவு மகளிரணி மாநில செயலாளர் மற்றும் ஊடக செய்தி தொடர்பாளரான டாக்டர் ஜெமிலா கடந்த 2015ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த டாக்டர் ஜெமிலா, கட்சியின் பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு கட்சியின் செயல்பாடுகளுக்கு ஆதரவாகப் பேசி வந்தார். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டார்.
தொலைக்காட்சி விவாதங்களில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு டாக்டர் ஜெமிலா பேசி வந்தார். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து ராஜினாமா செய்வதாக டாக்டர் ஜெமிலா அறிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது;
நான் கடந்த 2 வருடங்களாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, மாநில மகளிரணி செயலாளர் மற்றும் ஊடக செய்தி தொடர்பாளர் என்ற பொறுப்புகளுடன் உண்மையான தொண்டராக கட்சிப் பணி செய்து வந்தேன் .
பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகள் மற்றும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்.
இருப்பினும், எனக்கு கடந்த சில மாதங்களாக கட்சியின் செயல்பாடுகளில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.
மேலும் தமிழக பாஜகவின் கொள்கைகள் எழுத்தளவிலும், செயல்களில் மாறுபட்ட நடைமுறையைப் பின்பற்றுவதாகவும் உள்ளது. என்னைப்போன்ற கிறிஸ்துவ சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு பயணிப்பது கடினம் என்பதை உணர்கிறேன்.
எனவே இன்று முதல் எனது அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுகிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பாஜக மகளிரணி செயலாளர் ஜெமீலா கட்சியிலிருந்து திடீர் ராஜினாமா! பாஜக மகளிரணி செயலாளர் ஜெமீலா கட்சியிலிருந்து திடீர் ராஜினாமா! Reviewed by நமதூர் செய்திகள் on 23:27:00 Rating: 5

No comments:

Powered by Blogger.