எல்லாவற்றையும் மோடி பார்த்துக்கொள்வார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

எல்லாவற்றையும் மோடி பார்த்துக்கொள்வார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
தேனி(21 அக் 2017): மத்தியில் மோடி ஆட்சி இருக்கும் வரை நமக்கு கவலையில்லை எல்லாவற்றையும் மோடி பார்த்துக் கொள்வார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், இரட்டை இலை சின்னம் நமது அணிக்கு தான் கிடைக்கும். 46 எம்.எம்.ஏ.,க்கள் இந்த பக்கம் உள்ளனர். 92 சதவீதம் பொதுக்குழு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த பக்கம் தான் உள்ளனர். அதனால் தேர்தல் கமிஷனால் தீர்ப்பை மாற்றிச் சொல்ல முடியாது.
டெல்லி நம்மிடம் உள்ளது. மோடி இருக்கும் வரை யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஒபாமா வந்தாலும் சரி, டிரம்ப்பே வந்தாலும் சரி, மோடி இருக்கையில் கவலையில்ல்லை எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார். என்றார்.
மேலும் அதிமுக.,விற்கு ஆதரவான 40 எம்.எல்.ஏ.,க்கள் திமுக.,வில் ஸ்லீப்பர் செல்களாக உள்ளனர். என்றும் பீதியை கிளப்பினார்.
எல்லாவற்றையும் மோடி பார்த்துக்கொள்வார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எல்லாவற்றையும் மோடி பார்த்துக்கொள்வார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி Reviewed by நமதூர் செய்திகள் on 23:30:00 Rating: 5

No comments:

Powered by Blogger.